Friday, December 16, 2011

வீடு- தேவைகள் என்ன ?

வீடு தேவைகள் என்ன ?




அலுவலகம் வீடு இரண்டிலும் அதிக பணி பளுவால் கொஞ்சநாளாக பதிவிட முடியவில்லை...

வீடு.. தேவைகள் என்னன்னு யோசித்தால்.. ஆட்களுக்கு தகுந்தபடி ..  பழக்க வழக்கங்களுக்கு தகுந்தபடி தேவைகள் மாறும்.பொதுவான தேவைகளும் உள்ளது. வீடு கட்டும்போது / வாங்கும்போது இவைகளை உறுதி செய்துகொள்வது நல்லது.

ஏனெனில் வேண்டியபடி வீட்டின் அமைப்பை மாற்ற பெரும் செலவு செய்யவேண்டி வரலாம். சில சமயத்தில் அடிப்படை கட்டுமானத்தை மாற்றினால் தான் வீடு வேண்டியபடி மாறும் என்றால் அதற்கு ஆகும்  செலவு ஏறக்குறைய புது  வீடு கட்ட ஆகும் செலவாக இருக்கலாம்.

அது மட்டுமல்ல..வீடு கட்டும்போது அங்கு யாரும் இருக்கபோவதில்லை. எனவே எப்படி வேண்டுமானலும் வேலை செய்யலாம். ஆனால் மாற்றியமைக்கும்போது, வேறு வீடு பார்த்து சாமான்களை மாற்றிடவேண்டும், இல்லைனா குப்பை , புழுதியுடன் அதே வீட்டில் குடியிருக்க பழகி கொள்ள வேண்டும்.



எனவே தேவைகளை பார்த்தால், ஒரு சிறு குடும்பம் 2 பெரியவர்கள் 2 குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு 1 ஹால், 1 கிச்சன், 1 படுக்கையறை, 1 கூடுதல் அறை,  இருந்தால், குழந்தைகள் பெரியவர்களாகும்வரை சரியாக இருக்கும்.

பாத்ரூம், டாய்லெட்ன்னு வரும்போது இப்போதைய கட்டுமானத்தில் ரெண்டையும் ஒன்றாக தான் கட்டுகிறார்கள். அட்டாசுடு பாத்ரூம்/டாய்லட்டாக இருந்தால் ரொம்ப வசதி. குடும்பத்தினர் மட்டும் இருக்கும்போது பிரச்சனை இல்லை, யாராவது உறவினர், நண்பர்கள் தங்க வந்தால் கொஞ்சம் சிரமம் தான்.  அதனால்  அட்டாசுடு 1 , தனியாக 1ன்னு 2 இருந்தால் நன்றாக இருக்கும். அல்லது அட்டாசுடு பாத்ரூம்முடன் 2 பெட்ரூம் இருந்தாலும் வசதியே.

குழந்தைகளுக்கு தனியறை அவசியமான்னு யோசிக்கணும். குழந்தைகளுக்கு தனியறை வைத்திருப்பது கொஞ்சம் வசதியாக இருக்கலாம், ஆனால் குழந்தகளுக்கும் பெற்றோர்களுக்குமான நெருக்கத்தை குறைத்துவிடுகிறது என்பது ஒரு குறை. மேலும் வளர் இளம்பருவத்தில் (10 - 16) குழந்தைகள் தடம் மாறவும் தனியறை வாய்ப்பாக அமையலாம்.

பொருட்களை வைக்க ஒரு அறை தேவைபடலாம். ஆனால் லாப்ட் / செல்ப் போன்றவற்றை பயன்படுத்தினால் இதற்கு என ஒரு அறை கட்ட வேண்டியது இல்லை.


அதனால்
1)  ஹால்
2) கிட்சன்
3) படுக்கையறை
4) கூடுதல் அறை.

N + 1 என்பது தான் பொதுவான பார்முலாவாக இருக்கிறது
1) சுத்தம் சுகம் தரும்...
2) வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடுன்னு  பழமொழிகள் இருக்கு.. ஏன் அப்படி ?

இந்த வைத்தியனுக்கு கொடுப்பதை ... இப்படியும் மாற்றி சொல்லலாம்

வீடு மாற்றியமைப்பதற்கு(ALTERATION) கொடுப்பதை , கட்டுவதற்கு கொடு..


Saturday, December 10, 2011

வீடு தந்த ஹனுமான்


சாதாரணமா தெய்வங்கள் வீடு பேறுதான் தரும். இந்த சாமிங்களுக்கெல்லாம் நம்ம பார்த்தா ஒரு அலட்சியம். இந்த சனத்துக்கும்,பக்தர்களுக்கும் வேலையே இல்லை. விட்டா வெற்றிலைக்கு சுண்ணாம்பு கூட கேப்பாய்ங்கன்னுட்டு அலுத்துக்கினே கிடப்பாய்ங்க.ஆனால் ஆஞ்சனேயரை பொருத்தவரை அவரே ஒரு பக்தர். பக்தர்களோட சிரமங்கள் எல்லாம் நல்லா தெரிஞ்சவரு. அதனாலதேன் தலீவரு .. நமக்கு சூப்பர் வீடு ஒன்னை வாடகைக்கு பிடிச்சு கொடுத்தாரு. அதுவும் 24 மணி நேரத்துல.

படிக்க அம்புலிமாமா கதை கணக்கா தெரிஞ்சாலும் இது நெஜம் வாத்யாரே.. நாம கடந்த ஒரு வருசமா இருந்த வீட்டை பத்தி சிறுகுறிப்பு ஒன்னை வரைஞ்சாதேன் அனுமாரு செய்த ஹெல்ப் எப்படியா கொத்த டைம்லி ஹெல்ப்புன்னு புரியும்.

நம்ம வீடு ஒரு முட்டு சந்துல கடேசியில மாடியில இருக்கு.காத்து வெளிச்சத்துக்கு தடா.ஒரு நாளைக்கு 6 மணி நேரம்லாம் பவர் கட்டு இருக்கிற காலம். ஒரு வராந்தா,கிச்சன்,ஹால்,ஒரு பெட் ரூம் ,அட்டாச்ட் துணி உலர்த்த கூட மாடிக்கு போகப்படாது. தட்ஸால்.வாடகை ரூ1000.( வாட்டர் பில் ரூ .300)

வாடகை கூட பிரச்சினை இல்லை. இந்த பவர் பில் தான் லொள்ளே. நாம ஊட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கிறப்பயே "கொய்யால.. நான் காட்டுமிராண்டி ..எவனோடவும் அஜீஸ் ஆகமாட்டேன். நமுக்கு தனி மீட்டர் போட்டுக்கொடுத்துருங்கன்னு கண்டீஷனாவே சொல்லியிருந்தோம்.அவியளும் "அப்படியே ஆகட்டும்னு 6 மாசம் ஓட்டிட்டாய்ங்க.

கோ டெனன்ட் ஒரு வயசான பேச்சிலர். சகலவித மின் உபகரணங்களும் வச்சுக்கிட்டு கொண்டாடிட்டு பவர் பில் மட்டும் ரூ.140 ஐ கறாரா தள்ளி விட்டுருவாரு. ஆறு மாசத்துலயே பவர் பில் ரூ 200 ல ஆரம்பிச்சு ஆயிரத்து இரு நூறுவரை போயிருச்சு.
நமுக்கு ஊர் பஞ்சாயத்து பண்ணி பண்ணி பஞ்சாயத்துக்கு வர்ரவனை பஞ்சாயத்து பண்றவன் எப்படி பார்ப்பான்னு நெல்லாவே தெரியும்.அதுனால தனி மீட்டருக்கு ப்ரஷர் கொடுத்தோம்.செலவுல பாதிய ஏத்துக்கறேன்னு ரூ.3,000 வரை கேஷும் கொடுத்தாச்சு. ஒன்னும் பேரலை. ஆறு மாசம் ஓடிப்போச்சு.

"பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு வீடு பார்க்க ஆரம்பிச்சுட்டம். கடந்த நவம்பர் 29 , இருபதாவது திருமண நாள்.கானிப்பாக்கம் போயிருந்தம். மகள் எடுத்த ஃபோட்டோ நாம எப்படியா கொத்த பஞ்ச பரதேசின்னு டிஜிட்டல் துல்லியத்துல காட்டிருச்சு. நொந்து போயி புலம்ப மகள் மறு நாள் என்னென்னமோ தகிடு தத்தம்லாம் செய்து 45 லருந்து ஒரு 20 வயசு குறைச்சு -ஹவுஸ் ஓனர் கிட்டே ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி மாடியில ஒரு ஃபோட்டோ செஷன் எடுத்தாள்..

அப்பம் ஆஞ்சனேயர் ஒரு குரங்கு வடிவத்துல என்ட்ரி கொடுத்தாரு.அவர் கிட்டே பேச்சு வார்த்தை நடத்தி க்ளியர் பண்ண பிற்காடுதேன் ஃபோட்டோவே எடுக்க முடிஞ்சது. ( நவம்பர் ,30)

ஆனால் பாருங்க.. மறு நாளே ஹவுஸ் ஓனர் "யப்பா.. மேல் போர்ஷன் காலியாயிருச்சு. நீ மாத்திக்கிறியா பாரு.தனி மீட்டருன்னாரு.

இந்த வீடு பற்றி சில வரிகள். என்டர் ஆனதும் பெரிய ஹால் , அக்னி மூலையில அடுப்பு வாயு மூலையில பூஜை அறை (அலமாரி இல்லிங்கோ) - ஹாலை அடுத்து பெரிய வாசல் முக்காவாசிக்கு இரும்பு தகட்டு கூரை. ரைட்ல அட்டாச்டு -அடிஷ்னலா ஒரு பாத்ரூம்.

பழைய போர்ஷன்ல வாடகை ரூ.1000 ,பவர் பில் : ரூ.ஆயிரம் மைனஸ் ரூ.140 (கோ டெனன்ட் ஷேர்) வாட்டர் பில் ரூ.300 ஆக ரூ 2,160

இங்கன வாடகை ரூ.1,400 பவர் பில் ரூ.200 வாட்டர் பில் ரூ.300 ஆக ரூ.1,900 . வித்யாசம் ( ரூ.2160 மைனஸ் ரூ.1900 ) ரூ 260 .

கட்டற்ற வெளிச்சம், காற்று,சுதந்திரம், நம்ம ஜி.டி .நாயுடு வேலைகளுக்கு ஒரு பட்டறையே தயாராயிட்டிருக்கு. பவர் கட் நேரத்துல பாடிக்கு பவரேத்தறோம்ல..

செலவா ரூ.260 குறைஞ்சுருச்சு. வசதியா பல மடங்கு கூடிருச்சு. அல்லாம் அனுமார் கிரேஸ். ஆமா வீட்டுக்கு காரகன் சுக்கிரன் தானே.சுக்கிரனுக்குரிய க்டவுள் லட்சுமிதானே. ஆஞ்சனேயர் எப்படி ஊட்டை கொடுத்தாருன்னு கேப்பிக.சொல்றேன்.

ஆஞ்சனேயருக்கு ஸ்ரீ ப்ரதாய ன்னு ஒரு நாமா உண்டு. லட்சுமியை தந்தவனேனு அருத்தம். சீதா ஆரு லட்சுமி தானே. லட்சுமியை இழந்த ராமனுக்கு லட்சுமியை தந்தது அனுமாருதானே ..

கூட்டி கழிச்சு பாருங்க.கணக்கு கரீட்டா வரும்.