Saturday, December 3, 2011

வீடும் -வீடு பேறும் - அண்னன் முருகேசன்.

அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, வாக்காள பெருமக்களே, நமது பெருமதிப்புக்குரிய அண்ணன் தானை தலைவர் சித்தூர் முருகேசன் அவர்கள் நமது வலை பூவுக்கு ஒரு பதிவை அளித்துள்ளார்கள் .. 

அவரின் தளத்தில் பிரசுரமாகியுள்ள இந்த பதிவை இங்கே மறு பிரசுரம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  இந்த பதிவுலகிலேய என்னோட பதிவை காப்பி பண்ணிக்கலாம்னு சொல்லுறவங்க எனக்கு தெரிஞ்சு ரொண்டு பேர் தான்.

ஒருத்தர் நம்ம சித்தூர் முருகேசன்  http://www.anubavajothidam.com

இன்னொருத்தர் சிங்கை ராவணன். http://anjjamvakuppu.blogspot.com

நான் ரொம்ப நாளா வெறும் வாசகன் தான். கமேண்ட் மட்டும் போட்டுகிட்டு இருந்த என்னை நம்ம சித்தூர் முருகேசன் தான் என்னை எழுத சொன்னார் அவர் தளத்தில் என்னொட பதிவுகளும் இருக்குங்கிறது பெருமைக்குறிய விஷயம். ஓவர் டு முருகேசன். 
==========================================================================

வீடும் -வீடு பேறும்


அண்ணே வணக்கம்ணே !
இந்த எழுத்தும் ஒரு பேச்சுதேன். என்ன சைலன்ட் மோட்ல நடக்குது. இந்த பேச்சே மனிதன் காட்டில் வாழ்ந்தப்போ வேட்டைக்காக கூட்டத்தை பிரிஞ்சு மறுபடி கூடினப்போ ஆரம்பிச்சிருக்கும் போல. அப்பாறம் மன்சன் சஞ்சார வாழ்க்கைய விட்டு ஸ்திரவாசம் ஏற்படுத்திக்கிட்டப்போ ஊட்டுக்கு வந்து பொஞ்சாதி கிட்டே பீலா விடறதில ஆரம்பிச்சிருக்கும் போல.

அப்படி பீலா விடும்போது கொலிக்ஸ் ஆரும் உண்மைய போட்டு உடைக்காம இருக்கனும்னே மன்சன் வீட்டை கட்ட ஆரம்பிச்சானான்னும் நமக்கு ஒரு சம்சயம்.ஆனால் இந்த வீடு சமாசாரத்துக்கு பேசிக்கே கில்மா தான்னு அடிச்சு சொல்ல தோனுது.

காட்டு வாழ்க்கையில வேட்டையாடும் திறன் - சஞ்சார வாழ்க்கையில குதிரையேற்றம் இத்யாதி, ஸ்திரவாசத்துல தொழில் திறன் ,செல்வ செழிப்பை காட்டி குட்டிங்களை கரெக்ட் பண்ண மன்சங்கள்ள சிலரு ஆதிமன்சங்களாவே நின்னுட்டாய்ங்க போல.

அவன் பொஞ்சாதிய இவன் ,இவன் பொஞ்சாதிய அவன்னு கரெக்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கனும். அதுலயும் காட்டுவாழ்க்கையிலான லைஃப் ரிஸ்க் எல்லாம் ஸ்திரவாசத்துல இல்லியா ஆதி மன்சங்க ஸ்டேஜ்ல நின்னுட்ட பார்ட்டிங்க பயங்கர லந்து பண்ணியிருப்பாய்ங்க போல.

அவனவன் தன் பொஞ்சாதிய கட்டி காப்பாத்தவே வீடு மாதிரி எதையோ செய்ய ஆரம்பிச்சு அது இன்னைக்கு நில அபகரிப்புக்கு தனிப்பிரிவு போடற ரேஞ்சுக்கு பிக்காப் ஆயிருச்சுனு நினைக்கிறேன்.

மழை வெயில்ல இருந்து காப்பாத்திக்க வீடுதான் தேவைன்னு கிடையாதே. மொத்தத்துல வீடுங்கறதே கில்மாவை எந்த இன்டரப்ஷனும் -இன்செக்யூரிட்டியும் இல்லாம அனுபவிக்கத்தேன் உருவாகியிருக்கனும்.
அதுலயும் சொந்த வீடுங்கறது ஒவ்வொரு மன்சனுக்கும் ஒரு கனவாவே இருக்கு.

சொந்த வீடுங்கறது என்ன? இந்த சமூகத்துக்கு தனிமனிதன் போடும் லட்சுமண ரேகை. எம்.ஜி.ஆர் தொப்பி இல்லாம இருக்க முடிஞ்ச இடம் அவரோட வீடுதேன். கலைஞர் கருப்பு கண்ணாடி இல்லாம இருக முடிஞ்ச இடம் அவரோட வீடுதேன்.

மன்சன் விட்டு விடுதலையாகி ஆராமா இருக்க முடிஞ்ச இடம் வீடுதேன். வீடுங்கறது அவன் உள் மனப்படிமங்களின் ஸ்தூல வடிவம் - சரீரத்தின் நீட்சின்னு சொல்லலாம். அந்த மேட்டர்ல கன்டின்யுனிட்டி கெடுவதை மன்சன் லைக் பண்றதில்லை.அதனாலதேன் சொந்த வீடு கனவா போச்சு.

ஆரோ ஒரு மனோதத்துவ விஞ்ஞானி நம்ம கனவுகளுக்கெல்லாம் அடிப்படை கில்மான்னு சொல்லிவச்சிருக்காராம். இதை முழுக்க முழுக்க மறுக்க முடியுமா?

குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதனின் உள் மன தொன்ம படிமங்கள் அவனை வீடு கட்ட வைக்குது. மனிதனை வீடு பற்றி கன்வு காண வைக்குது போல.

டார்வின் ஒவ்வொரு உயிரோட குணாம்சமும் மன்சன்லயும் இருக்குங்கறதை தன் தன் பரிணாம தத்துவத்துக்கு ஆதாரமா சுட்டி விஸ்தாரமான உதாரணங்களை கொடுத்து ஸ்தாபிக்கிறார். வீடு பற்றி கனவு காணுவோர் கூடு கட்டி /குகை/வளையில் வசிக்கும் ஜீவராசிகளின் குணங்களை கொண்டவர்களாக இருக்கலாம்.

வீடு பற்றிய கனவுகளை கணக்கில் எடுக்காது காலத்தை தள்றவுக இன்னபிற ஜீவராசிகளின் குணங்களை கொண்டவர்களாக இருக்கலாம்.

இதையெல்லாம் படிச்சுட்டு "வக்ரம் புடிச்ச மன்சன்யா எல்லாத்துலயும் இதே இழவா"ன்னு திட்டிக்காதிங்க. உடலுறவை தெலுங்கு சமஸ்கிருத மொழிகளில் சம்யோகம்னு சொல்வாய்ங்க. யோகம் என்றால் கலத்தல்.
சம் என்பது சிறப்பு விகுதி.

உடலுறவில் ஆண் பெண் கலக்கிறார்கள்.அதன் மூலம் (அது ஆழமானதாக இருந்தால் இயற்கையோடும் கலக்கிறார்கள் - இயற்கையில் இருந்து தம்மை பிரிக்கும் மனதை - ஈகோவை கடக்கிறார்கள்.

யோகம்ங்கற வார்த்தைக்கும் கலத்தல்ங்கறது தான் பொருள்.யோகம் மனிதனை இறைவனோடு கலக்கிறது.
இறைவனோடு இவன் கலந்து தான் இருந்தான். பிறப்புக்கு முன் ஆகட்டும் -இறப்புக்கு பின் ஆகட்டும் இறைவனோடு கலந்துதான் இருந்திருப்பான்/இருக்கப்போகிறான்.

இறைவனோடு - இவன் கலந்திருந்த நினைவுகள் சப் கான்ஷியஸ்ல இருக்கலாம். இறைவன் தன்னை இயற்கையின் வடிவத்துல வெளிப்படுத்தியிருக்கான். பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி. அவளை சேர்ந்தால் இயற்கையை -இயற்கையாக தன்னை வெளிப்படுத்திக்கிட்ட இறைவனை கலந்த நிறைவு மனிதனுக்கு ஏற்படுது.

மனம் கடந்த நிலையை வீடு பேறுன்னு சொல்லலாம். அந்த வீடு பேற்றின் ஃபோன்சாய்க் வடிவமே வீடுன்னு நான் சொன்னா மறுக்க முடியுமா? இறைவனின் சாங்கத்யத்துல மன்சன் எப்படி நிச்சிந்தையா இருக்கானோ அப்படி ஒரு ஃபீலிங்கை நாலு சுவர்கள் கொடுக்குது. மனிதனோட அசலான நோக்கம் அந்த நாலு சுவர் கிடையாது.

அவன் பிறப்புக்கு முன் தான் பெற்றிருந்த நிச்சிந்தையான நிலையை - மனமற்ற நிலையை - அகம் (ஈகோ) கடந்த நிலையை மீண்டும் பெற விரும்புறான். இயற்கையாக வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இறைவனுடன் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதியான பெண்ணின் மூலம் இறைவனை கூட கனவு காண்றான்.

நான் பல தடவை சொல்வது போல மன்சனுக்கு எது அவெய்லபிளோ அதனோட அருமை பெருமை உறைக்கவே உறைக்காது. வீடு மேட்டர்ல கூட இதே நிலை தான். அது அன் அவெய்லபிளா இருந்தப்போ ஒடம்பெல்லாம் எண்ணெய் பூசிக்கிட்டு தெருவெல்லாம் புரள்றான். அது அவெய்லபிள் ஆனதும் அடுத்த ஸ்டாப்பிங்கை பற்றி ரோசிக்க ஆரம்பிச்சுர்ரன்.

ஆக்சுவலா இவன் கனவு காணும் வீடு இவன் சொந்த கனவில்லை.வாடகை கனவு . இவன் கனவு காணும் வீடு இவன் சொந்த வீடு அல்ல. இவன் வாழ்ந்த வீட்டின் நகல்.

(இப்டி ஊடு மேட்டர்ல சொல்ல மஸ்தா மேட்டருங்க இருக்குங்ணா இன்னொரு சந்தர்ப்பத்துல நோண்டி நுங்கெடுப்போம். அதுவரைக்கும் அம்பேல் வைத்து விடைபெறுவது ..ஹி ஹி சொல்லனுமா என்ன?)
 
அவரின் பதிவுக்கன லிங்க் http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_7253.html
 ======================================================================
உங்களின் மேலான கருத்தை வரவேற்கிறேன்.   நன்றி. 

Thursday, December 1, 2011

வீடு .. ஏன் ஏதற்கு ?

வீடு.. ஏன் , ஏதற்கு ?


வீட்டில இருக்கிறவங்களுக்கு தகுந்தபடி தான் வீடு அமையனும்/கட்டணும்/பார்கணும்... சரி

வீட்டில யார் இருக்கிறாஙக ?
அட என்னப்பா இது .. கேள்வி குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் வீட்டில் இருப்பாங்க...


மேலோட்டமா பார்த்தா சரிதான் .. ஆனா உண்மையில் சரிதானா?


ஒரு பொருளை யார் அதிகம் பயன் படுத்துகிறார்களோ... அவர்களுக்கு தகுந்தபடி தான் அது வடிவமைக்க படவேண்டு.  இது தான் புராடட் டிசைன் எனப்படும் வடிவமைப்பு மேலாண்மையின் அடிப்படை தத்துவம். 


அப்படி பார்த்தால் வீடு இதை அதிகம் பயன்படுத்துவது பெண்களும் குழ்ந்தைகளும் தான். 
அவர்களின் தேவைக்கு தக்கபடி வீடு வடிவமைக்கபட்டல் எல்லரும் அதில் பிர்ச்சனை இல்லாமல் இருக்கலாம்.

பொருளாதாரரீதியில் முடிவு எடுக்கும் உரிமை பாதிக்கும் அதிகமாக ஆண்களிடமே உள்ளது. பெருநகரங்களில்  ஆண்-பெண் பேதமில்லாமல் அதிகப்ட்ச பெண்களும் வேலைக்கு போய் /தொழில் செய்து சம்பாதித்தாலும் பெரும்பாலும் சொத்து ஆண்களின் பெயரிலேயே உள்ளது. சில சமயத்தில் பெண்கள் பெயரில் வாங்கினாலும் அது வருமான வரி கணக்கு காட்ட , எதிர்காலத்தில் இரண்டு பேர் வருமானத்தையும் கூட்டி காட்டி  லோன்வாங்கவும் தான்.  


கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தும் வீட்டின் போர்டில் ராம் இல்லம், ராஜ் இல்லம் என்று இருக்கும் வீடுகளை நிறைய காணலாம்.


இதிலென்ன தவறு இருக்கு ? கணவர் குடும்ப தலைவர். அப்படி தான் அரசாங்கமும் சொல்லி ரேசன் கார்டு எல்லாம் குடுத்து இருக்கு. வீட்டு போர்டில் பேர் எழுதுறத போய் பெரிசா சொல்ல வந்துட்டீங்களேன்னு நினைப்பீங்க..


தத்வமசி..நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். அப்படீன்னு உபநீஷத் சொல்லுது.. இருத்யத்தின் நிறைவை வாய் பேசும்.. அப்படின்னு ஒரு வசனம் பைபிளில் இருக்கு. பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும்னு பழமொழி இருக்கு. 


விஷ்யம் என்னன்னா .. உலகம் மொத்தமுமே. ஆண்களின் பார்வையில் வடிவமைக்கபட்டு இருக்கு இதில் பெண் தான் பெரும்பாலும் வேண்டபடாத ஆறாவது விரலாக உணர்கிறாள். பெண் தேவை எப்பன்னா ஆண்கள் மட்டுமே பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும் சரி அதை விளம்பரப்படுத்த ஒரு கவர்ச்சி பொம்மையாக தேவை. மெகா சீரியலில் கதறியழும் பாத்திரத்துக்கு தேவை. வீல்லியாகூட தேவை. ஆனா ஒரு சக உயிரியா தேவை இல்லை.


சுலபமா புரிய ... நமக்கு இப்போ  இன்னொரு முகவரியாய்ட்ட செல்போனை எடுத்துகோங்க..
செல்போன் வடிவமைப்பு, அதனுடன் வரும் ரோப். ஹெட் போன் எல்லாமே ஆண்கள்  பயன்படுத்த சுலபமாக இருக்கிறமாதிரி தான் வடிவமைக்க பட்டு இருக்கு. செல்போனை கொண்டு சொல்லும் ஆண், அதை சட்டை பாக்கெல்ட்டிவச்சுகலாம் .. இல்லை பேண்ட் பாக்கடில் வச்சுகலாம். அதே போனை கொண்டு செல்லும் பெண் அதை கையிலயேதான் வச்சுக்கணும் எங்க போனாலும். எதையும் எடுக்கணும்னா போனை வச்சுடு அதை எடுத்துட்டு திரும்ப அதை வச்சுட்டு போனை எடுக்கனும்.  சிலர் உடைகளுக்குள் வைத்தாலும் போன் கால் வந்தாலும் இல்லை போன்பண்ணனும்லும் பலர் முன்னிலையில் அங்கிருந்து எடுக்கவேண்டி இருக்கும். இதற்காகவே கையிலயே வச்சுகிறாங்க.


நானும் என் மனைவியும் வெளியில் எங்கும்போனா போனை அவளுடைய போனை என்னிடம் கொடுத்துட்டுறது  வழக்கம். நான் இப்படி செய்யாதே உன் போனை உங்கிட்ட வச்சுகோ.. ரெண்டும் எங்கிட்டை இருந்தா உன்னை நான் எப்படி கூப்பிறதுன்னு கேட்டா .. நான் போனை எங்க வச்சுக. கையில வச்சுக கஷ்டமா இருக்குன்னு சொல்லுறா.. அதான் ஹேன்பாக் கொண்டுவந்தாலன்றி.. ரெண்டு போனையும் நான் தான்வச்சு ..எனக்கு நானே கூப்பிடுக்கணும்.


இதை எதுக்கு சொல்றேன்னா செல்போன் எல்லாரும் பயன்படுத்தும் ஒரு பொருள். அதிலேயே நாம் கவனிச்சாலும், கவனிகாம விட்டாலும் இத்தனை விஷய்ங்கள் இருக்கு. 2 வருடம் வைத்திருக்கபோகும் செல்போனில் இவை எல்லாம் இருந்தால் வீடுன்னு வரும்போது எத்தனை இருக்கும்?


ஓஷொ சொல்வார் ஆண்கள் வீட்டு வருவது என்பது போவதற்கு வேறு எந்த இடமும் இல்லை, கிளப் , பார்,கடை எல்லாம் மூடியாகி விட்டது இனி வீட்டுக்குதான் போக முடியும் என்னும்போது தான். ஆனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியெ வருவது என்பது அதைதவிர  வேறு வழி இல்லை என்னும்போது தன். வீட்டை அதிகம் நேசிப்பது அதற்காக நேரம் செலவிடுவது பெண்கள் தன், வேலக்கு அல்லது  சொந்த தொழிலுக்கு போனாலும் இது தான் நிலை. 


ஆண்களில் சிலர் வீட்டு வேலைகளில், மிக ஆர்வமுடன் சிறு வயது முதலே ஈடுபடுவதை பார்க்கலாம். நாம் நினைப்போம், இப்படிபட்டவர்களின் மண வாழ்க்கை சிறப்பாக இருக்க்ம் என. ஆனால் உண்மை நேர்மாறாக இருக்கிறது . இப்படி பட்டவர்களுக்கு மணவாழ்க்கையில் பல பிரச்சனைகளையே பார்த்து இருக்கிறேன்.


இப்படி பேசும்போது இது ஆணதிக்கம் என்றால்.... 
ஆணதிக்கம் பெணதிக்கம் .. என்ன பெயர்  சொன்னலும் எது உள்ளதோ அது மெய்.  எனவே.. வீடு என்று வரும்போது பெண்கள், குழந்தைளின் வசதிக்கு தகுந்தபடி தான் வீடு அமையவேண்டும். பெண்கள் குழந்தகளின் வசதிக்கு வீடு அமைந்தால் அதில் ஆண்களும் நிம்மதியாக வசிக்க இயலும்.

சரி அப்ப பெண்கள் / குழந்தைகளின் தேவை என்ன. ?